தெலுங்கு திரையுலகின் ஆல் டைம் ஃபேவரைட் நடிகரான மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களின் மகனான மெகா பவர் ஸ்டார் ராம்சரண் தற்போது இந்திய சினிமாவின் பிரபலமான கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார். சிறுத்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இயக்குனர் ராஜமௌலியின் மஹதீரா படத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமா இடையே கவனம் ஈர்த்தார் ராம் சரண்.

இதனை அடுத்து இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான தனி ஒருவன் படத்தின் ரீமேக்காக துருவா படத்தில் நடித்த ராம் சரண் மீண்டும் இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த RRR திரைப்படம் இந்த ஆண்டில் வெளியாகி இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. 

கடைசியாக தனது தந்தை மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் இணைந்து ராம்சரண் நடித்த ஆச்சார்யா திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் இணைந்துள்ள ராம்சரண் RC15 திரைப்படத்தில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனை அடுத்து இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கும் புதிய பிரம்மாண்ட படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது குடும்பத்தின் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தற்போது சோசியல் மீடியாவில் அனைவருடனும் பகிர்ந்துள்ளார். நடிகர் ராம்சரண் மற்றும் அவரது மனைவி ஒப்பாசனாய் இருவரும் அவர்களது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். கலாட்டா குழுமம் நடிகர் ராம்சரண் மற்றும்  உப்பாசனாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
 

pic.twitter.com/C4ps1jgcUD

— Chiranjeevi Konidela (@KChiruTweets) December 12, 2022