இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக மிக பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ளது. அந்தவகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் பல மொழிகளில் ரிலீஸாகவுள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களாக ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன் என்கிற பொன்னியின் செல்வன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, சுந்தர சோழர், ஆழ்வார்க்கடியான் நம்பி, பெரிய பழுவேட்டரையர், சிறிய பழுவேட்டரையர், பூங்குழலி, மதுராந்தகன், பார்த்திபேந்திர பல்லவன், கொடும்பாளூர் வேளாளர் பூதி விக்ரம கேசரி உள்ளிட்ட கதாப்பாத்திரங்கள் திகழ்கின்றன.

இந்த கதாபாத்திரங்களில் நமது நட்சத்திரங்களான சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரஹ்மான், விக்ரம் பிரபு, பிரபு ஆகியோர் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

முன்னதாக பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து வெளிவந்த  டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மற்ற பாடல்கள் மற்றும் ட்ரைலருகாக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மலையாள ரிலீஸ் உரிமையை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#PS1 🗡️ to be distributed in KERALA by Sree @GokulamGopalan's @GokulamMovies! Happy to have you aboard! 🗡✨#PonniyinSelvan 🗡️ #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions #SreeGokulamMovies @Tipsofficial @PrimeVideoIN pic.twitter.com/Oym3lrkN7K

— Lyca Productions (@LycaProductions) August 22, 2022