ஆகச் சிறந்த நடிகராக படத்திற்கு படம் புதிய உச்சங்களை எட்டி வரும் நடிகர் தனுஷ் அவர்கள் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில்  நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

நானே வருவேன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரசிகர்களின் ஃபேவரட்டான தனுஷின் படங்களான யாரடி நீ மோகினி , வேலையில்லா பட்டதாரி திரைப்படங்களின் பாணியில் தனுஷ் நடித்த திரைப்படம் திருச்சிற்றம்பலம். 

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் உடன் இணைந்து நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், முனீஷ்காந்த் ஆகியோர் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரசன்ன GK படத்தொகுப்பு செய்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. ராக்ஸ்டார் அனிருத் இசையில் தனுஷ் எழுதிய திருச்சிற்றம்பலம் படத்தின் பாடல்கள் அனைத்தும் வைரல் ஹிட் அடித்துள்ளன. 

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்றுள்ள மயக்கமா கலக்கமா பாடல் படத்தில் இடம்பெற்றதன் பின்னணியில் இருக்கும் ருசிகரமான தகவல்களை இயக்குனர் மித்ரன் ஜவஹர் தற்போது பகிர்ந்துள்ளார். வைரலாகும் அந்த வீடியோ இதோ…
 

 

படத்துல "மயக்கமா கலக்கமா" பாட்டு கிடையாது..- @MithranRJawahar reveals the real reason!#SunTV #VanakkamThamizha #Thiruchitrambalam #Dhanush #Anirudh #MithranRJawhar #MayakamaKalakama pic.twitter.com/y8eSoPVCI6

— Sun TV (@SunTV) August 27, 2022