தென்இந்திய நடிகர்சங்க தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.விஷால்,கார்த்தி,நாசர் உள்ளிட்டோர் அடங்கிய பாண்டவர் அணி பாக்கியராஜ்,பிரசாந்த்,ஐசாரி கணேஷ் உள்ளிட்டோர் அடங்கிய சுவாமி சங்கராஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த தேர்தலில் முன்னணி நடிகர் நடிகைகள் பலரும் கலந்துகொண்டு வாக்களித்து வருகின்றனர்.சென்னை 28,கலகலப்பு 2,தமிழ் படம் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான மிர்ச்சி சிவாவும் தனது வாக்கினை பதிவு செய்தார்.

இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த சிவா தனக்கே உரிய நக்கல் பாணியில் பத்திரிகையாளர்களிடம் சுவாரசியமாக பதிலளித்தார்.பாராளுமன்ற தேர்தலில் கூட சீக்கிரம் வாக்களித்துவிடலாம் அனால் இங்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.