“நான் விஷால் மீது கோவமாக இருந்தது உண்மை தான்..” உண்மையை உடைத்த நடிகர் அப்பாஸ்..– Exclusive Interview உள்ளே..

நடிகர் விஷால் உடனான பிரச்சனை குறித்து நடிகர் அப்பாஸ் பகிர்ந்து கொண்ட தகவல் - Actor Abbas open up about his fight with Actor vishal | Galatta

தென்னிந்திய திரையுலகில்  90 களின் பிற்பகுதியில் ரசிகர்களின் மனம் கவர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். பல சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர் சமீபத்தில் திரைபடங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு குடும்பத்தினருடன் வெளிநாட்டில் குடிபெயர்ந்து வசித்து வருகிறார். பல ஆண்டுகள் இடைவெளி இருந்தாலும் நடிகர் அபாஸுக்கும் ரசிகர்களுக்கும் இடையேயான பந்தம் இன்றும் தொடர்ந்து வருகிறது. இவர் நடிப்பில் வெளியான வி ஐ பி, காதல் தேசம், ஆனந்தம் போன்ற பல படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் பிரபல நடிகர் அப்பாஸ் கலந்து கொண்டு தனது திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் நடிகர் விஷால் உடனான செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து நடிகர் மனம் திறந்து பேசினார். அவர் பேசுகையில்,

"நான் நினைக்கிறேன் அவரோட வாழ்கையில அவர் சில சிக்கல்களை சந்தித்துள்ளார்‌ என்று.. என்னை பொறுத்த வரை அந்த நேரம் அவர் மீது கோவமாக இருந்தேன். ஆனா அதை மன்னிச்சு மறந்துட்டேன்.‌ எனக்கு அதுல ஒரு பிரச்சினையும் இல்ல.. இப்ப கூட அவரை மீட் பண்றா மாதிரி இருந்தா ஹாய்.. ஹாய்.. அவ்ளோ தான். ஆனால் என்னால் அவருடன் நெருக்கமாக முடியாது.

என் பக்கம் பிரச்சனை இல்லை‌ . ஒருவேளை அவர் எண்ணத்தில் அதுபோல இருக்கலாம்.  என்னோட எண்ணம் எல்லாம் சினிமா நண்பர்களை ஓன்றிணைப்பது தான்.  அதனால் தான் கிரிக்கெட் ஆரம்பிச்சோம்.  ஸ்டார் நைட் பண்ணோம். ஆனா அது சரியா போகல.. அதனால் இந்த மாதிரி பண்ணலாம் னு பண்ணோம்.

ஏன்னா நடிகர்களுக்கு கிரிக்கெட் பிடிக்கும். ரசிகர்களுக்கு கிரிக்கெட்டும் பிடிக்கும். நடிகர்களையும் பிடிக்கும். அதனால் இந்த 2 விஷயத்தையும் சரியா பண்ணிட்டா ரசிகர்களிடையே நல்லா போகும். இதனால் நாளைக்கு எதோ ஒரு நடிகருக்கு மார்கெட் டவுனா இருந்தா மற்ற சக நடிகர் அவருக்கு உதவி பண்ண முடியும். இதுதான் என்னோட எண்ணம். ஆனா விஷால் எண்ணத்துல எண்ண இருந்தது தெரில.‌ அவரோட மனசை யாரோ பொய் சொல்லி மாத்திட்டாங்க.. என்ன பொறுத்த வரை ஓரு இடத்துல வற்புறுத்தி இருக்கனும்னு ஆசை இல்ல..  அதனால் நான் வெளிய வந்துட்டேன்.

அந்த நேரம் கஷ்டமா இருந்தது. நான் நினைச்சது பண்ண முடியலனு.. ஆனா இவரோட எண்ணம் எதோ ஒரு மூலைக்கு போயிடுச்சு..  நான் யோசிச்சா மாதிரி விஷாலும் ஒருகட்டத்தில் இதை யோசிப்பார்.  எப்படி இருந்தாலும் அவரும் ஒரு சினிமா குடும்பம் தான்.. குடும்பத்தில் சிக்கல், சண்டை வரும் இருந்தாலும் குடும்பம் குடும்பம் தான்... என்றார் நடிகர் அப்பாஸ்.

மேலும் நடிகர் அப்பாஸ் நடிகர்கள் அஜித் குமார், விஜய், மாதவன், சூர்யா, விஜயகாந்த் உள்ளிட்ட திரை பிரபலங்கள் குறித்து பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

 

இறுதி நிமிடம் வரை வலியுடன் போராடிய ‘அங்காடித் தெரு’ சிந்து காலமானார்.. – சோகத்தில் திரையுலகினர்..
சினிமா

இறுதி நிமிடம் வரை வலியுடன் போராடிய ‘அங்காடித் தெரு’ சிந்து காலமானார்.. – சோகத்தில் திரையுலகினர்..

 முதல் முறையாக மகன்களுக்காக எழுதிய பாடல்..! ஜெயிலர் பட ‘ரத்தமாரே’ பாடல் குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி.. வைரல் பதிவு உள்ளே..
சினிமா

முதல் முறையாக மகன்களுக்காக எழுதிய பாடல்..! ஜெயிலர் பட ‘ரத்தமாரே’ பாடல் குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி.. வைரல் பதிவு உள்ளே..

“தலைமுறை தாண்டி நிற்கும் தந்தை மகன் கூட்டணி..” வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ பட ரத்தமாரே பாடலின் Glimpse..
சினிமா

“தலைமுறை தாண்டி நிற்கும் தந்தை மகன் கூட்டணி..” வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ பட ரத்தமாரே பாடலின் Glimpse..