ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் அடுத்த வெற்றிமாறன் திரைப்படம் வாடிவாசல். மிக பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர் சூர்யா வித்யாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் படத்தில் இயக்குனர் அமீர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் முன்னதாக வெளியானது மேலும் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளது குறிப்பிடதக்கது. முன்னதாக இப்படத்தின் முன்னேற்பாடுகள் வேலைகள் தொடங்கபட்டது. ஏறுதழுவுதல் சார்ந்து உருவாகும் இப்படத்திற்காக சூர்யா சிறப்பு பயிற்சிகள் மேற்கொண்டார். இது தொடர்பான வீடியோ முன்னதாக வெளியாகி மிகப்பெரிய அளவு வைரலானது.

பின் சில காரணங்களினால் வாடிவாசல் பட வேலை நிறுத்த பட இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படம் இயக்குவதில் இறங்கினார். அதே நேரத்தில் சூர்யா இயக்குனர் சிவா வுடன் கூட்டணி அமைத்து மிக பிரம்மாண்டமான ‘சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் வாடிவாசல் படத்திற்கான வேலைகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படும் என்று இயக்குனர் வெற்றிமாறன் முன்னதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் வெற்றிமாறனின் ஆஸ்தான கலை இயக்குனர் ஜாக்கி அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘விடுதலை’ படம் குறித்து பல சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள வாடிவாசல் படம் குறித்து கேட்கையில் அவர்,

“வாடிவாசல் எல்லோரும் நாவல் படிச்சிருப்பாங்க.. அந்த நாவல் அங்கதான் இருக்கும். நீங்க விடுதலை படத்தோட நாவல் படிச்சீங்கனா அதுல இப்படி ஒரு வாத்தியார் கதாபாத்திரத்திரம் வரும் னு நம்மலால எதிர்பார்த்திருக்க முடியாது.‌. நாவல் ல அது ஒரு சின்ன லைனாக தான் இருக்கும். இவர் திடீருனு எந்த கதாபாத்திரத்திற்கு அதிக ஈடுபாடு கொடுத்திருப்பாரு னு தெரியாது.‌ லாக்கப் படிச்சிட்டு விசாரணை பார்த்த கண்டிப்பா புரியாது. அதிலிருந்து தப்பிச்சு வந்த ஒருத்தர் எழுதுன புத்தகம் அது.. அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் எழுதியிருப்பார். அதே மாதிரிதான் வாடிவாசல் படமும் இருக்கும் னு எதிர்பார்க்குறேன்.” என்றார்.

மேலும் தொடர்ந்து வடசென்னை படம் குறித்து கேட்கையில் அவர்,

"அவர் ரொம்ப தெளிவு... அதிகபட்சம் 10 போன்கால் தான் அவரிடம் இருந்து வந்திருக்கும். மொத்தம் 6 படங்களில் அவர் ரெடி ஆயிட்டாரு னா எனக்கு கால் வரும்.. அப்படி வந்துச்சுனா எனக்கு தெரிஞ்சுடும் அவர் எங்க இருக்கீங்க னு கேட்பார்‌. நான் எப்ப வரனும் னு சொல்வேன்... இவ்ளோதான் எங்க இரண்டு பேருக்குள்ள.. மத்தபடி எதிர்கால திட்டங்கள் மத்ததெல்லாம் இருக்காது.

இப்படி ஒரு இயக்குனரிடம் தொடர்ந்து படம் பண்ணும்போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.. இப்படியே எல்லா படமும் இருக்கனும் னு நினைக்கிறேன்." "விடுதலை 2 படம் நான் இன்னும் இருக்கு.. நாங்க படம் பற்றி பேசுன விஷயங்கள் 50% கூட இன்னும் முதல்பாகத்தில் வரவில்லை. அதனால் இன்னும் நிறைய விஷயங்கள் அந்த படத்தில் இருக்கும்.. இதுல வெறும் படத்தோட அறிமுகம் தான் இருக்கு..நானும் 2ம் பாகத்திற்கு காத்திருக்கிறேன்.." என்றார் கலை இயக்குனர் ஜாக்கி

மேலும் கலை இயக்குனர் ஜாக்கி பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..