ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.திரைப்பட நடிகை ப்ரியா ராமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
.
இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரங்களான பார்வதி மற்றும் ஆதி கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஷபானா மற்றும் கார்த்திக் இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த தொடரின் முக்கிய காட்சி ஒன்றை ஜீ தமிழ் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஆதியின் திருமணம் நின்றதை அடுத்து,தனது அம்மா அகிலாண்டேஸ்வரியிடம் ஆதி பார்வதி குறித்த உண்மையை தெரிவிக்கிறார்.தனக்கும் பார்வதிக்கும் நடந்த திருமணம் குறித்த உண்மையை அகிலாண்டேஸ்வரிக்கு தெரிவித்தார்.இதனை தொடர்ந்து என்ன நடக்கவுள்ளது என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.