பிரம்மாண்டத்தின் உச்சமாக இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் பாகம்-1 திரைப்படம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2வது பாகத்தை அடுத்த 6-9 மரங்களுக்குள் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

புகழ்மிக்க எழுத்தாளர் அமரர் கல்கி அவர்களின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வசனத்தில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளன.

சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், இளையதிலகம் பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நிழல்கள் ரவி, ஷோபிதா, லால், அஷ்வின் காக்கமனு, ஜெயசித்ரா, கிஷோர், அர்ஜுன் சிதம்பரம், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த பாடலாக தேவராளன் ஆட்டம் பாடல் நாளை செப்டம்பர் 23-ம் தேதி வெளியாகவுள்ளது. அதனை அறிவிக்கும் வகையில் தேவராளன் ஆட்டம் பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மிரட்டலான அந்த ப்ரோமோ வீடியோ இதோ…