தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சீயான் விக்ரம்.கடின உழைப்பால் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் விக்ரம்.இவரது வித்தியாசமான படங்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

அடுத்ததாக இவர் நடித்துள்ள கோப்ரா,பொன்னியின் செல்வன் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.பொன்னியின் செல்வன் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெறவுள்ளது.இன்று மதியம் விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் வெளியானது.

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சிலர் தகவல்களை பகிர்ந்து வந்தனர்.தற்போது விக்ரம் தரப்பில் இருந்து இதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது உண்மை தான்.

லேசான நெஞ்சு அசௌகரியம் காரணமாக மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார் தற்போது நலமாக உள்ளார்.ஒரு நாளில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்.தேவையற்ற வதந்திகளை தவிர்த்து விடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Dear fans and wellwishers,
Chiyaan Vikram had mild chest discomfort and is being treated for the same. He DID NOT have a heart attack as reports falsely claim. We are pained to hear rumours to this effect.
That being said, we request you to give him and the family the.... 1/2

— Suryanarayanan M (@sooriaruna) July 8, 2022

the family the privacy they need at this time. Our dear Chiyaan is fine now.
He is likely to be discharged from hospital in a day.
We hope this statement provides clarity and trust that the false rumours will be put to rest.

— Suryanarayanan M (@sooriaruna) July 8, 2022