தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து பலவிதமான கதாபாத்திரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தவர் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். திரைப்படங்கள் மட்டுமல்லாது மெகா தொடர்களிலும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த பப்லு பிரித்வி ராஜ் தனது திரைப்பயண அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். முன்னதாக கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பப்லு பிரித்தி ராஜ் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் போலவே பேசி காட்டினார்.

அப்படி பேசுகையில், இயக்குனர் கே.பாலச்சந்தர் சார் என்னை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு பிலிம் இன்ஸ்ட்யூட் முடித்து வாய்ப்பு தேடி சுற்றிக் கொண்டிருந்தபோது இயக்குனர் T.ராஜேந்தர் அவர்கள் போன் செய்து ஒரு தாயின் சபதம் திரைப்படத்தில் என்னை அறிமுகப்படுத்தினார் அந்த திரைப்படம் மிகவும் நன்றாக போனது. ஆனால் எனக்கு வயது போதவில்லை. தப்பான படங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு நல்ல திரைப்படங்களை எல்லாம் கைவிட்டு இரண்டு வருடம் படமே இல்லாமல் இருந்தேன்.

அப்போது என் அப்பா சொன்னார், போய் KB சாரை பார் என்று... மறுபடியும் போய் KB சார் அவர்களின் அலுவலகத்தில் வெளியே ஒரு குப்பைத் தொட்டி இருக்கும் அதன் அருகில் கை காட்டிக் கொண்டு நின்றேன் அவர் போகும்போது என்னை பார்த்து,ஹே இங்கே வா… என இயக்குனர் பாலச்சந்தர் அவர்கள் எப்படி பேசுவாரோ அச்சு அசலாக அதே போல, அப்பா எப்படி இருக்கிறார் கேட்டதாக சொல். நாளை மாலை 5.30 மணிக்கு வா என K.பாலச்சந்தர் அவர்கள் போலவே பேசினார். தொடர்ந்து ஐந்து நிமிடம் தாமதமாக சென்றால் எப்படி K.பாலச்சந்தlர் அவர்கள் திட்டுவாரோ அதே போல திட்டியும் காட்டினார். 'ஏண்டா அஞ்சு நிமிஷம் லேட்டு முண்டம்…’ 'வானமே எல்லை என ஒரு படம் பண்றேன்... அதில் நீ ஒரு நல்ல கேரக்டர் நடிக்கிறாய்' என K.பாலச்சந்தர் அவர்களின் அதே உடல் மொழியோடு பப்லு பேசியதை ரசிகர்கள் கைதட்டி ஆரவாரத்தோடு உற்சாகமாக கேட்டனர். அட்டகாசமான அந்த வீடியோ இதோ…