தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் அசோக்செல்வன் சூது கவ்வும் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பீட்சா||-வில்லா, தெகிடி, கூட்டத்தில் ஒருவன், சம்டைம்ஸ் என அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலைக்கு முன்பு இவரது நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படமும் சூப்பர் ஹிட்டானது.

இதனையடுத்து தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவான தீனி (நின்னிலா நின்னிலா) படத்தில் கதாநாயகனாக நடித்த அசோக் செல்வன் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். கடைசியாக தமிழில் அசோக்செல்வன் நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் ஹாஸ்டல் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மன்மதலீலை படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதனிடையே அசோக் செல்வனின் மற்றொரு திரைப்படமாக தயாராகி வருகிறது நித்தம் ஒரு வானம்.

இயக்குனர் ரா.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்து வரும் நித்தம் ஒரு வானம் திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் நித்தம் ஒரு வானம் திரைப்படத்திற்கு விது ஐய்யனா ஒளிப்பதிவில், ஆண்டனி படத்தொகுப்பு செய்ய, கோபி சுந்தர் இசையமைக்கிறார். இந்நிலையில் அசோக் செல்வனின் நித்தம் ஒரு வானம் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியானது அசத்தலான அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…


A truly special film. With close friends starring & making it. Nitham Oru Vaanam / Aakasham will be an experience beyond this poster. #NithamOruVaanam #Aakasham
Wishing @Rakarthik_dir @AshokSelvan @GopiSundarOffl @riturv @Aparnabala2 @ShivathmikaR the very best ! pic.twitter.com/j2bI0R84cw

— Dulquer Salmaan (@dulQuer) February 7, 2022