புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் அற்புதப் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாக்கப்படும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத பிரம்மாண்டப் திரைப்படமாக தயாராகிறது பொன்னியின் செல்வன். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கலை இயக்கத்தை இந்தியாவின் சிறந்த கலை இயக்குனர் தோட்டா தரணி மேற்கொள்ள ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

பொன்னியின் செல்வனின் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யாராய், குந்தவையாக திரிஷா, சுந்தரசோழராக பிரகாஷ்ராஜ், பெரிய பழுவேட்டரையராக சரத்குமா, சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம், பூங்குழலியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி என முன்னணி கதாபாத்திரங்களில் முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. முன்னதாக நடிகர் ஜெயம் ரவி மற்றும் சீயான் விக்ரம் ஆகியோர் படப்பிடிப்பை நிறைவு செய்த நிலையில் நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வைரலாகும் அந்த புகைப்படம் இதோ.