இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் அட்டகாசமான திரில்லர் கதைகளத்தில் உருவான திரைப்படம் ‘அநீதி’. இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களில் கவனம் நடிகர் அர்ஜுன் தாஸ் கதனாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் படத்தில் அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார், பிக் பாஸ் பரணி, ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த்துள்ளனர். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் M.கிருஷ்ண குமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், G.வசந்தபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் A.M.எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்ய ரவிக்குமார்.M படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் அநீதி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் அவர்கள் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஆரம்பத்தில் இருந்தே பெற்றிருக்கும் அநீதி திரைபடத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்கள் தனது S பிக்சர்ஸ் சார்பில் வழங்கியுள்ளார். அதன்படி அநீதி திரைப்படம் இன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் நாயகன் அர்ஜுன் தாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் "இன்று எனக்கும் எனது குழுவினருக்கும் ஒரு கனவு நினைவான தினம். இந்த படத்தை இயக்குனர் வசந்தபாலன் சார் இயக்கியதற்கும், ஜி.வி.பிரகாஷ் அண்ணன் இசையமைத்ததற்கும், இயக்குனர் ஷங்கர் சார் எங்கள் படத்தை வழங்குவதற்கும் நான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. மேலும் சில அற்புதமான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் பணியாற்றியதும் அதிர்ஷ்டமாக எண்ணுகிறேன். நேற்று அநீதி பட முன்னோட்ட காட்சியை வந்து பார்க்க நேரம் ஒதுக்கிய அனைவருக்கும் எனது நன்றிகள். எங்கள் குழுவுடன் உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

இது எங்களுக்கு முக்கியமான தருணம். இந்த படத்திற்கான அனைத்து புகழும் வசந்தபாலன் சாருக்கு மட்டுமே சேர வேண்டும். சார், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்... பெரிய அளவில் வெற்றி பெறுவீர்கள் என்று நம்புகிறேன். உங்களில் அநீதி படத்திற்காக ஏற்கனவே டிக்கெட் வாங்கியவர்களுக்கும், டிக்கெட் வாங்கப் போகிறவர்களுக்கும் - என் இதயத்தின் ஆழத்திலிருந்து ஒரு பெரிய நன்றி. இது நீங்கள் உழைத்து சம்பாதித்த பணம் என்பதையும், உங்கள் பிஸியான நேரத்திலும் நீங்கள் படத்திற்காக நேரத்தை செலவிடுகிறீர்கள் என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்,

கைதியில் இருந்து எனக்கு ஆதரவாக இருந்த பத்திரிக்கையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் அநீதி படம் பிடிக்கும் என்று நம்புகிறேன். இன்று முதல் அநீதி & திருமேனி அனைத்தும் உங்களுடையது. தயவுசெய்து உங்கள் கருத்தை எனக்கு அனுப்பவும், ஏனெனில் இது எனது நடிப்பு திறனை மேம்படுத்த நிச்சயமாக உதவும். எப்போதும் போல் உங்கள் அனைவரின் ஆசியும் ஆதரவும் எனக்கு வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார் நடிகர் அர்ஜூன் தாஸ். தற்போது அர்ஜீன் தாஸ் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களால் வைராலாகி வருகிறது.