17 வயது சிறுமியைக் காதல் வலையில் வீழ்த்தி, தினம் தினம் உல்லாசம் அனுபவித்து வந்த 2 குழந்தைகளின் தந்தை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே இருக்கும் காங்கேயநகரைச் சேர்ந்த 28 வயதான ராமசந்திரன், ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்குத் தந்தையாக இருக்கிறார்.

இதனிடையே, தனக்குத் திருமணம் ஆனதை மறைத்து, அந்த பகுதியின் மற்றொரு தெருவில் உள்ள 17 வயது இளம் பெண்ணிடம் நெருங்கிப் பழகி, காதல் வலையில் வீழ்த்தி உள்ளார்.

இதனையடுத்து, அந்த பெண்ணை சந்திக்கும்போதெல்லாம், தினம் தினம் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து இன்புற்று இருந்துள்ளார்.

காமத்து இன்பம் ராமசந்திரன் கண்ணை மறைத்துவிட்டது. தினம் தினம் நடக்கும் உல்லாச இன்பத்தில், அந்த 17 வயது சிறுமியின் வயிறு பெரிதாகிப் போனது.

ஆம், அந்த சிறுமி கரு உற்றாள். இதனையடுத்து, தன்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ளும்படி, ராமசந்திரனை சிறுமி வற்புறுத்தி உள்ளார்.

ராமசந்திரனும், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, தினம் தினம் ஏமாற்றி வந்துள்ளார். ஆனால், சிறுமியின் வயிற்றிலிருந்த கரு நாள் தோறும் வளர்ந்துள்ளது.

ஒரு கட்டத்தில், இந்த விசயம் சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவே, கடும் அதிர்ச்சியடைந்த அவர்கள், ராமசந்திரன் சென்று திருமணம் விசயமாகப் பேசி உள்ளனர்.

ஆனால், திருமணம் செய்துகொள்ள ராமசந்திரன் மறுத்த நிலையில், சிறுமியின் பெற்றோரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டி அனுப்பியதாகத் தெரிகிறது. ஆனால், இப்போது சிறுமியின் வயிற்றிலிருந்த கரு, 8 மாதமாக வளர்ந்துள்ளது.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் ராமசந்திரனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அடங்காத காமம் எதையும் செய்யத் துணியும்! காரணம், காமத்து இன்பம் எல்லோருக்கும் கண்ணை மறைக்கும்!